1312. | ஆழிப்படை யுடையான்றம 1னரிகேதன னென்போன் பாழிப்படை பொருவாரொடு 2பயில்போரல தறியே னேழைப்படை யிதுவோவெனக் கெதிராகுவ தாயில் வாழிப்படை பொருதென்னென வையாநனி வந்தான். | (இ - ள்.) ஆழிப்படை உடையான் தமன் - சக்கரப் படையை உடையவனாகிய அச்சுவகண்டன் படைஞனாகிய, அரிகேதனன் என்போன் - அரிகேதனன் என்னும் பெயரையுடைய இவ்விஞ்சையன், பாழிப்படை பொருவாரொடு - பெரிய படையோடே போர் செய்கின்ற வீரர்களுடன், பயில் போர் அலது அறியேன் - போர் ஆற்றுதலே அல்லால் வீண்பேச்சுப் பேசுதல் முதலியவற்றை யான் அறிந்தேனில்லை, ஏழைப்படை - எளிய மானிடப் படையாகிய, இதுவோ - இதுதானோ, எனக்கு எதிர் ஆகுவது - என்னுடன் எதிர்த்துப் போர் செய்யும் ஆற்றலுடையது, ஆயில் வாழி - அவ்வாறு ஆற்றலுடையதாயின் அது வாழ்க, படைபொருது என் - இவ்வேழைப் படையோடே போர் செய்தலால் எனக்கு வரும் புகழ்தான் யாது?, என - என்று, வையா - இகழ்ந்து பேசி, நனி வந்தான் - விரைந்து மேல் வருவானாயினன், (எ - று.) அவ்வாறு வந்த அரிகேதனன்; போர் செய்வதல்லது வீண் பேச்சுக்கள் பேச அறியேன்; இம்மானிடப்படை ஏழைப்படை; இதன்கண் எனக்கு நிகராய மறவர் இரார்; இவரோடு போர் செய்தலிற் பயன் என்னை! என்று இகழ்ந்து பேசிக்கொண்டு வந்தான் என்க. | ( 182 ) | | |
|
|