சார்த்தூலகன் அரிகேதனனை எதிர்தல் | 1313. | கள்ளாற்1 களி யிலனாலிகல் களமண்டிய செருவின் உள்ளாற்களி யுற்றானிவ னுயிருண்கென வுருவி நள்ளாதவர் தலைவவ்விய நகைவாளது வீசித் தள்ளாதவ னெதிரேமிகு சார்த்தூலக னேற்றான். | (இ - ள்.) கள்ளாற் களியிலனால் - கள்ளுண்டானைப்போல இவன் பேசினும் கள்ளுண்டு வெறிகொண்டானலன் இவ்வரிகேதனன், இகல் களம் மண்டிய செருவின் உள்ளால் இவன் களியுற்றான் - போர் ஆற்றும் களத்தின்கண்ணே உண்டாகிய போர்த்தொழிலாலே இவன் மறவெறி கொள்ளாநின்றான், இவன் உயிர் உண்கு - இவனுடைய உயிரை யானே குடிப்பேன், என உருவி - என்று தன் வாளை உறை கழித்து, நள்ளாதவர் தலைவவ்விய நகை வாள் அது வீசி - பல பகைவர்களின் தலைகளை வெட்டிப் புகழ்கொண்டு திகழா நின்ற அவ்வாட்படையைச் சுழற்றிக்கொண்டு, தள்ளாதவன் எதிரே - பகைவரை எதிர்த்தலை ஒழியாத அவ்விஞ்சையனுக்கு எதிரே, மிகு சார்த்தூலகன் ஏற்றான் - ஆற்றல் மிக்க சார்த்தூலகன் என்பான் சென்று போர் ஏற்றான், (எ - று.) அவ்வாறு இகழ்ந்து பேசிவந்த அரிகேதனனுக்கு முன்னர், சார்த்தூலகன் என்னும் வீரன் வாளை உறைகழித்து வீசியவனாய்ச் சென்று அவனை எதிர்ந்தான் என்க. | ( 183 ) | | |
|
|