தூமகேதனன் போர்க்கு வருதல் | 1317. | வாழுநா ளுலந்து மற்றவன் மண்மேல் மலையென மறிதலு மலைமே லாழியான் றமர்க ளஞ்சினா ரஞ்சு மாயிடை யடுதிற லுடையா னூழிநா ளெரியுங் கூற்றமு முருமு மொப்பவன் கைப்படை நவின்றான் சூழிமா லியானைத் 1துளைமதஞ் செறிப்பத் தோன்றினான் றூமகே தனனே. | (இ - ள்.) வாழும் நாள் உலந்து - தான் வாழும் நாள் முடிந்து விட்டமையானே, மற்றவன் - அவ்வரிகேதனன், மலையென மண்மேல் மறிதலும் - மலைபுரண்டாற் போன்று மண்ணின்மேல் பிணமாய்ப் புரண்டவுடனே, மலைமேல் ஆழியான் தமர்கள் - உத்தரசேடியின்கண் வதியும் அச்சுவகண்டன் படைஞர்கள், அஞ்சினார் - பெரிதும் அஞ்சுவாராயினார், அஞ்சும் ஆயிடை - அவ்வாறு அவர்கள் அஞ்சும்பொழுது, அடுதிறல் உடையான் - பகைவரைக் கொல்லும் ஆற்றல் மிக்கவனும், ஊழிநாள் எரியும் - ஊழிக்காலத்தே உலகினை அழிப்பதாகிய தீயும், கூற்றமும் - மறலியும், உருமும் - இடியேறும், ஒப்பவன் - போன்றவனும், கைப்படை நவின்றான் - கையின்கட் படைகளை மேற்கொண்டவனும், துளை மதம் செறிப்ப - மூவகைத் தொளையின் வழியாக மதநீர் நிறைந்து வழியும், சூழிமால் யானை - முகபடாமுடைய யானையின் மிசையேறி ஊர்பவனுமாய், தூமகேதனன் தோன்றினன் - தூமகேதனன் என்பான் வந்து தோன்றலானான், (எ - று.) | ( 187 ) | | |
|
|