அழல்வேகனைத் தேவசேனன் எதிர்தல் | 1328. | அருமாலை வேல்வல் லழல்வேக னாகு மவனாயி லாக வமைக எரிமாலை வேல்வ லிளையார்க ணிற்க விவனென்னொ டேற்க வெனவே 1பொருமாலை வாள்கை பொலிகேட கத்த னணிபோ திலங்கு முடியன் செருமாலை மன்ன ரிறைதேவ சேன னெதிரே சிவந்து செலவே. | (இ - ள்.) அருமாலை வேல்வல் அழல்வேகன் ஆகும் - பெறற்கரிய வெற்றி மாலையையுடையவனும் வேற்படை கொண்டு போர் ஆற்றுதலிலே வல்லவனும் ஆகிய, அழல் வேகன் என்னும் வீரன் போலும் ஈண்டு வருவோன், அவன் ஆயில் ஆக - அவ்வழல்வேகனே ஆயின் நன்று ஆகுக, அமைக - எனக்கு எதிராக அவன் அமைக, இவன் என்னோடு ஏற்க - இவ்வழல் வேகன் என்னோடு போர் ஆற்றக் கடவன், ஆதலின் - எரிமாலை வேல்வல் இளையார்கள் நிற்க - சுடர் ஒழுங்குற்ற வேற்படை வல்லுநரான நம் இளைஞராகிய வீரர்கள் ஈண்டே நிற்பாராக, எனவே -என்று கூறி, பொருமாலை வாளன் - போர் செய்யும் தன்மையுடைய வாளை ஏந்தியவனாய், அணிகேடகத்தன் - அழகிய கிடுகுடையனாய், மணிபோது இலங்கு முடியன் - மணிகளும் மலர்களும் திகழ்கின்ற முடிக்கலனை உடையவனாய், செருமலை மன்னர் இறை - வெற்றி மாலை சூடுமன்னர் மன்னனாகிய, தேவசேனன் - தேவசேனன் என்பான், சிவந்து எதிரே செல - சினந்து அவ்வழல் வேகனுக்கு எதிரே செல்லா நிற்க, ( ) அழல்வேகன் - அச்சுவகண்டனைச் சேர்ந்தவன்; தேவசேனன் - சடிமன்னன் மைத்துனன். அழல்வேகன் வருகையைக் கண்டு தேவசேனன், இவன்றான் அழல்வேகன் என்னும் புகழ்பெற்ற வீரன் போலும், அவனாயின் நன்று அவனோடு யானே எதிர்ப்பேன் என்று சிவந்து எதிரே வந்தான் என்க. | ( 198 ) | | |
|
|