(இ - ள்.) தாமம் ஆர்ந்த மணி ஐம்பால் தையல்தாதை - மலர்மாலை பொருந்திய நீலமணி போன்ற நிறமுடைய அளகக் கற்றையை உடைய சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனுடைய, மைத்துனன்ஆம் - மைத்துனன் ஆகின்ற, சேமம் ஆர்ந்த தனிச் செங்கோல் - காவற்றொழில் நன்கமைந்த ஒப்பற்ற செங்கோன்மைச் சிறப்புடைய, தேவசேனன் - தேவசேனனுடைய, கைவாளால் - கையின் கண்ணதாகிய வாட் படையாலே, சாமவண்ணன் - இருள்நிறமுடையனாகிய, தழல்வேகன் - அழல்வேகன் என்பான், சாய்ந்தான் - இறந்தான், சாய்ந்தபொழுதத்தே - அவன் இறந்து வீழ்ந்தவுடனே, தூமம் ஆரம்கமழ் குஞ்சி - நறுமணப்புகையும் சந்தனமும் கமழ்கின்ற தலைமயிரையுடைய, சுவணகேது - சுவணகேது என்னும் வீரன், தோன்றினன் - போர் செய்யப் புகுந்தான், (எ -று.)சடிமன்னன் மைத்துனனாகிய தேவசேனனால் அழல்வேகன் கொல்லப்பட்டவுடனே சுவணகேது என்னும் ஒருவீரன் போர்க்களத்தே வந்து தோன்றினான் என்க. |