(இ - ள்.) செய்யலுற்ற மாயம்அதும் - சுவணகேது இயற்றிய மாயப் போரின் தன்மையும், சிலையும் நிலையும் - வில்லின் இயல்பும் நின்று எய்யும் நிலையும், சுருங்கிய வைத்து - சுருங்கியிடத்தவாய் வைத்து, எய்யலுற்ற - செலுத்துகின்ற, பகழியையும் - அம்புகளையும், எண்ணி - ஆராய்ந்து, வேந்தன் - சடிமன்னன், எதிர் செறுப்பான் - அவன் எதிரே நின்று போர்செய்யும் பொருட்டு, மையலுற்ற மதயானை - மதமயக்கமுடைய தன் யானையை, மலைப்ப உந்தி - பகைவன் திகைக்கும்படி செலுத்தி, மாற்றானை - சுவணகேதனனை நோக்கி, நையலுற்றாய் என உரையா - நீ மிகவும் வருந்திவிட்டாய் போலும் என்று வினவி, நாமவாளி - அச்சந்தரும் அம்புகளை, சிந்தித்தான் - ஏவினான்,சுருங்கி - நாணிடத்தே அம்பு தொடுத்தற்பொருட்டுச் சிறிது தடிப்புடையதாய் அமைக்கப்பட்ட இடம். சிந்தித்தான் - சிந்தினான். மாயப் போர் தொடங்கிய சுவணகேதுவினோடு போர்செய்யும் பொருட்டுச் சென்ற சடிவேந்தன் யானையை ஏறி விற்போர் தொடங்கினான் என்க. |