விஞ்சையர் படை புறமிடல்

1351. தூவி யார்சுவ ணக்கொடி
மேவி னான்பட வேமிகை
1மாவி னார்படை வாரிபோர்
ஓவி யாங்குடை வுற்றதே.
     (இ - ள்.) தூவி ஆர் சுவணக் கொடி - சிறகுகளையுடைய கருடப் பறவையை
எழுதிய கொடியை, மேவினான் - மேற்கொண்டவனாகிய சுவணகேது, படவே -
போரின்கண்ணே மாண்டு வீழ்தலுமே, மிகை மாவினார் படைவாரி - மிகுதியாய யானை
குதிரைகளையுடைய விஞ்சையர் படையாகிய கடல், போர்ஓவி - போர் செய்தலை ஒழித்து,
ஆங்கு - அப்பொழுது, உடைவுற்றது - புறங்கொடுத் தோடிற்று, (எ - று.)
சுவணகேது மாண்டவுடன் அச்சுவகண்டன் படைகள் புறங்கொடுத்து ஓடலாயின, என்க.

( 221 )