சிறீசேனன் உடைந்தோடும் தன் படையைத் தடுத்தல் | 1353. | கடைந்த கார்க்கடல் போற்கலந் 1துடைந்த வாட்படை யோடுநீர்க் கடைந்த வான்சிறை யாயினான் மிடைந்த வேற்படை வீரனே. | (இ - ள்.) கடைந்த கார்க் கடல்போல் கலந்து உடைந்த - கடையப்பட்ட கரிய கடல்போலே பகைப்படையோடு போர் செய்து கலங்கிப் புறங்கொடுத்த, ஆட்படை - காலாட்படையாகிய, ஓடுநீர்க்கு - விரைந்து ஓடுகின்ற வெள்ளத்திற்கு, மிடைந்த வேற்படை வீரன் - செறிந்த வேல்வீரர் படையுடன் சென்ற சிறீசேனன் என்பான், அடைந்த வான் சிறை ஆயினான் - எதிரே அடைக்கப்பட்ட ஓர் உயரிய அணையாகித் தடுத்தான், (எ - று.) அடைந்த - அடைத்த: மெலித்தல் விகாரம். வாட்படை எனக் கண்ணழித்து வாளேந்திய படையெனக் கொள்ளினும் ஆம். புறங்கொடுத்து ஓடுகின்ற தம் படையாகிய ஆற்றிற்கிட்ட அணை போன்று, எதிர் நின்று சிறீசேனன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான், என்பதாம். | ( 223 ) | | |
|
|