சிறீசேனன் உடைந்தோடும் தன் படையைத் தடுத்தல்

1353. கடைந்த கார்க்கடல் போற்கலந்
1துடைந்த வாட்படை யோடுநீர்க்
கடைந்த வான்சிறை யாயினான்
மிடைந்த வேற்படை வீரனே.
     (இ - ள்.) கடைந்த கார்க் கடல்போல் கலந்து உடைந்த - கடையப்பட்ட கரிய
கடல்போலே பகைப்படையோடு போர் செய்து கலங்கிப் புறங்கொடுத்த, ஆட்படை -
காலாட்படையாகிய, ஓடுநீர்க்கு - விரைந்து ஓடுகின்ற வெள்ளத்திற்கு, மிடைந்த வேற்படை
வீரன் - செறிந்த வேல்வீரர் படையுடன் சென்ற சிறீசேனன் என்பான், அடைந்த வான்
சிறை ஆயினான் - எதிரே அடைக்கப்பட்ட ஓர் உயரிய அணையாகித் தடுத்தான், (எ -
று.)

     அடைந்த - அடைத்த: மெலித்தல் விகாரம். வாட்படை எனக் கண்ணழித்து
வாளேந்திய படையெனக் கொள்ளினும் ஆம்.

     புறங்கொடுத்து ஓடுகின்ற தம் படையாகிய ஆற்றிற்கிட்ட அணை போன்று, எதிர்
நின்று சிறீசேனன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான், என்பதாம்.

( 223 )