(இ - ள்.) குன்றின்மேல் குடை வேந்திர்காள் - அரண்வலிமிக்க மலையுச்சியிலே மேலும் குடைகவித்து வாழும் வேந்தர்களே!, பொன்றும் இவ்வுடலின் பொருட்டு - இறந்தேதீரும் எளிய இவ்வுடலைச் சில் பகல் ஓம்பும் பொருட்டு, என்றும் நிற்கும் இரும்புகழ் - அழியாது எப்போதும் நிலைத்தற்குரிய பெரிய புகழை, இன்று நீர் கழிந்தீர்கள் ஆல் - இன்று நீயிர் இழந்துவிட்டீரே, ஆல் : அசை, (எ - று.)“மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்து விடத்து“ (திருக். செய். 968) என்னும் திருக்குறளை ஈண்டு ஒப்பு நோக்குக. குன்றின் மேற் குடைவேந்திர் என்றது இகழ்ச்சி. என்னை ? பகைவர் ஏறுதற்கரிய குன்றின் உச்சியிலிருத்தலால் நுங்கள் குடையுடன் நீவிர் வேந்தராயிருந்தீர் போலும், என்னும் குறிப்பிற் கூறினானாகலின் என்க. |