சிறீபால சிறீசேனர் போர்த்திறம் | 1367. | திரிவில் 4சாரி கைச்செயல் புரவி சேர்ந்து பொங்கின 5வரிவில் வாளி மன்னரு மருவு 6போர்ம யங்கினார். | (இ - ள்.) திரிவு இல் சாரிகைச் செயல் - மாறுபாடிலாத சாரிகைத் தொழிலிலே, புரவி சேர்ந்து பொங்கின - இருவருடைய குதிரைகளும் பொருந்திச் சினந்தன, வரி வில் வாளி மன்னரும் - வரிந்த வில்லையும் அம்புகளையுமுடைய சிறீசேன சிறீபாலரும், மருவு போர் மயங்கினார் -நெருங்கிய போர்த் தொழிலிலே பொருந்துவாராயினர், (எ - று.) இருவர் குதிரைகளும் சாரிகை சுற்றின ; இருவரும் போர் செய்யத் தொடங்கினர் என்க. | (237) | | |
|
|