சுவலனசடி

137. 1மற்ற மாந கர்க்குவேந்தன் மான யானை மன்னர்கோன்
அற்ற மின்றி நின்றசீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான்
முற்று முன்ச டிப் 2பெயர்சொன் மூன்று லஃகு 3மான்றெழப்
பெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார்.
 
     (இ - ள்.) அ மா நகர்க்கு வேந்தன் - அந்தப் பெரிய இரதநூபுரச் சக்கரவாளத்திற்கு
அரச னாவான்; மானயானை மன்னர்கோன் - பெருமைமிக்க யானையையுடைய
அரசர்க்கரசன்; அற்றம் இன்றி நின்றசீர் - அழிவில்லாமல் நிலைபெற்ற புகழையுடைய;
முற்று முன்சடிப் பெயர்சொல் அழல்பெயர் புணர்ச்சியான் - முடிவதற்கு முன்னே
சடியென்ற சொல்லோடு சேர்த்துச் சொல்லப்பெறுகிற தீயின் பெயராகிய சுவலனன் என்கிற
பெயரை யுடையவன்; மூன்று உலஃகும் - மூவகை யுலகங்களும்; ஆன்றுஎழ - அமைந்து
மேம்பட; பெற்று நின்ற பெற்றியான் பீடு யாவர் பேசுவார் - பெற்றுநின்ற பெருமையை
யுடையவனது உயரிய தன்மைகளை யாவர் எடுத்துக் கூற வல்லவர்? (எ - று.) மற்று :
அசை. எனவே அவன் பெயர் சுவலனசடி என்றாராயிற்று. அவனுடைய பெருமை எடுத்துக்
கூறுவதற்கு அருமையானது என்பதாம். “இப்பால் விஜயார்த்த பர்வத தக்ஷிணறோணியில்
ரதநூபுர சக்கரவாள நகரத்து நமிஸந்தாநத்து வித்யாதர ராஜா, ஜ்வலநஜடி மஹாராஜன்“
என்பது ஸ்ரீபுராணம். சுவலன - என்னுஞ்சொல்லை அழற்பெயர் எனத் தமிழில்
மொழிபெயர்த்தார்.

( 19 )