1374.

மாதி போகு மானமா
மீது போக விட்டவன்
சோதி 4கூடு சுடர்முடிக்
கேத மாக வெண்ணினான்.
     (இ - ள்.) மாதிபோகும் மானமா - மண்டலமாக ஓடுகின்ற வலிய குதிரையை, மீது
போகவிட்டவன் - உயரச் செல்லும்படி செலுத்திய சிறீசேனனுடைய, சோதிகூடு சுடர்முடிக்கு
- மிக்க சுடருடைய முடிக்கலன் அணிந்த தலைக்கு, ஏதம் ஆக - கேடு உண்டாக என,
எண்ணினான் - சிறீபாலன் கருதினான், (எ - று.)

     மாதி - குதிரையின் நடைவகையுள் ஒன்று. சுடர்முடிக்கு ஏதமாக எண்ணுதலாவது:-
தலையை அரிய வேண்டும் என்று கருதுதல் என்க.

(244)