இதுவுமது

1381 மதிதொடு நெடுவரை 3மான விஞ்சையர்
விதிபடு 4மனிசரை வெருவி மீண்டனர்
அதிசய மிதுவென வலர நக்கனன்
கதிர்விடு வளையெயி றுடைய காளையே.
     (இ - ள்.) மதிதொடு நெடுவரை - திங்களைத் தொடுமாறுயர்ந்த நீளிய மலைகளிலே
வாழும், மான விஞ்சையர் - மானம் மிக்க விச்சாதரர்கள், விதிபடு மனிசரை வெருவி - நம்
விதியிலே அகப்பட்டு வாழும் எளிய மானிடரை அஞ்சி, மீண்டனர் - மீள்வாராயினர்!, இது
அதிசயம் - இச்செயல் வியப்புடைத்து, என - என்று கூறி, அலர நக்கனன் - பெருகச் சிரித்தான், கதிர்
விடுவளை யெயிறு உடைய காளையே - சுடருகின்ற கோரப் பற்களையுடைய கனகசித்திரன்,
(எ - று.)

     விதிபடு மனிசர் - விச்சாதரருக்குத் திறைகொடுத்து அவருடைய ஆணையிலே
அடங்கி வாழும் மனிதர் என்க.

     நக்கனன் என்றதற்கேற்பக் கதிர்விடு வளை யெயிறுடைய காளை என்றார். நமது
ஆணைக்கடங்கி அஞ்சிவாழும் மனிசரை யாம் அஞ்சுதல் புலி புல்வாய்க்
கஞ்சினாற்போன்றதொரு வியப்புடைத்தென்பான். அதிசயம் இது என்றான் என்க.

(251)