1398. மாடடைந் தெதிர்ந்துதம் வயிரத் 2தண்டினாற்
பீடடைந் தவர்பிடர் புடைப்ப வானையின்
கோடுடைந் துதிர்ந்தன கொடுமுட் கேதகைத்
தோடுடைந் தொருவழித் 3தொகுத லொத்தவே.
     இ - ள்.) மாடு அடைந்து - தம் பக்கலிலே எய்தி, பீடு அடைந்தவர் -
மறமாண்புடையோர், தம் வயிரத்தண்டினால் - தமது வயிரமணியாலியன்ற தடியாலே,
பிடர்புடைப்ப - தம் எருத்திலே தாக்க, ஆனையின் - யானைகளின், உடைந்து உதிர்ந்தன
கோடு - நுறுங்கி உதிர்ந்த கொம்புகள், கொடுமுள் - வளைந்த முட்களையுடைய, கேதகை -
வெள்ளைத்தாழை மலர்களின், தோடுடைந்து - இதழ்கள் சிதறி, ஒருவழி - ஓரிடத்தே,
தொகுதல் - குவிதலை, ஒத்தவே - ஒத்திருந்தன, (எ - று.)

     வீரர்கள் வயிரத் தண்டாலே மோதினமையால் நுறுங்கி உதிர்ந்த யானைமருப்புக்கள்
வெண்டாழை மலர்த்தோடு சிதறிக் குவிந்ததை ஒத்திருந்தன என்பதாம்.

(268)