1403. | அணியமு மாரமுங் கொடிஞ்சுங் கோலுமாத் துணிவினைக் கவனமாத் துரக்கும் பாகரா மணியவிர் தேரெனு மதலை நாயகர் பணிவருங் குருதிநீர்ப் பவ்வத் தோட்டினார். | (இ - ள்.) அணியமும் ஆரமும் கொடிஞ்சும் கோலுமா - மரக்கலத்திற்குரிய அணியமும் ஆரமுமாகத் தேரின் கொடிஞ்சையும் கோலையும்கொண்டு, துணிவினை கவனமா துரக்கும் பாகரா - தெளிந்த தொழிற்றிறமுடைய புரவிகளை மீகான்களாகக்கொண்டு, மணி அவிர் தேர்எனும் - மணிகள் விளங்கும் தேர் ஆகிய மரக்கலங்களை, நாயகர் - தலைவர்கள், பணிவு அரும் குருதிநீர்ப் பவ்வத்து ஓட்டினார் - குறைதலில்லாத குருதியாகிய நீரையுடைய கடலிலே செலுத்தா நின்றனர், (எ - று.) அணியம் ஆரம் என்பன மரக்கல உறுப்புக்கள். மீகான் - மரக்கல மியக்குவோன். மதலை - மரக்கலம். குருதிக் கடலுள் குதிரைகள் மாலுமிகளாக, தேர்வீரர்களாகிய மரக்கலத் தலைவர்கள் தம் தேர்களாகிய மரக்கலங்களை இயக்கினர் என்க. | (273) | | |
|
|