1404. | நுதலிய 1செருநில நொறிற்செந் நீரினுண் முதலையின் முதுகென நிவந்த தோற்பரங் கதலிகை காம்பொடு 2கடுகித் தாமரை 3மதலையந் தாளணை வாளை போன்றவே. | (இ - ள்.) நுதலிய - குறிக்கப்பட்ட, செருநிலம் - போர்க்களத்தில், நொறில் - விரைந்த செலவினையுடைய, செந்நீரினுள் - குருதி வெள்ளத்தூடே, முதலையின் முதுகு என நிவந்த - முதலையின் முதுகுபோன்று உயர்ந்தனவாகிய, தோற்பரம் - கேடகம், கதலிகை காம்பொடு கடுகி - கொடிகளின் கழிகளோடு நெருங்கி, தாமரை - தாமரைமலரின், மதலையந்தாள் அணை - ஊற்றுக்கோலாகிய நாளத்தை அணையாநின்ற, வாளைபோன்ற - வாளை மீன்களை ஒத்தன, (எ - று.) தோற்பரம் கதலிகைக் காம்பொடு கடுகித் தாமரைத் தாளணை வாளை போன்ற என இயைக்க. தோற்பரம் - கிடுகு. மதலை - சார்பு - ஊற்றுக்கோல். | (274) | | |
|
|