விசயனை அந்நால்வரும் வளைத்துக் கோடல்

1411 இரத்தின கண்டனு மேனை வீரரும்
வரைத்தனர் வருபடை வீதி வாயெலாம்
எரித்தனர் நால்வரு மிளைய காளையை
முரித்திடு முனிவின ராகி முற்றினார்.
 
     (இ - ள்.) இரத்தின கண்டனும் - மணிகண்டனும், ஏனை வீரரும் - மற்றைய
மறவர்களும், வருபடை - தம்மோடுவரும் படையை, வரைத்தனர் - கூறுபடுத்துக்
கொண்டவராய், வீதிவாய் எலாம் - தாம் செல்லும் வழியெல்லாம், எரித்தனர் - தீயால்
எரித்தனராய், நால்வரும் - அச்சுவகண்டனுடைய நான்கு தம்பிமார்களும், இளைய
காளையை - விசயனை, முரித்திடு முனிவினர் ஆகி - கொன்றுவிடுதற்குரியதொரு
பெருஞ்சினம் உடையராய், முற்றினார் - வளைத்துக்கொண்டனர், (எ - று.)

     ஈண்டும் இளமை பருவங்குறித்து நின்றது.
     முரித்தல் - அழித்தல்; கொல்லுதல்.

     இரத்தினகண்டன் முதலிய அச்சுவகண்டன் தம்பியர், விசயனைக் கொன்றொழிக்கும்
கருத்துடன் சினமிக்கு வளைத்துக்கொண்டனர் என்க.

(281)