மணிகண்டன் நிற்க ஏனைய நால்வரும் மாய்தல் | 1418. | வனைகதி ரிலங்குதோள் வயிர கண்டனோ டனைவரு மலாயுதற் கமர்தொ லைந்ததும் கனகசித் திரனது பாடுங் 1கண்டரோ அனல்2்படு மனத்தனங் கொருவ னாயினான். | (இ - ள்.) வனைகதிர் இலங்குதோள் - புனைந்த அணிகலன்களின் ஒளிதிகழ்கின்ற தோளையுடைய, வயிரகண்டனோடு - வயிரகண்டன் என்பானோடு, அனைவரும் - ஏனையோர் அனைவரும், அலாயுதற்கு - விசயனுக்கு, அமர் தொலைந்ததும் - போர் செய்ய ஆற்றாது இறந்து தீர்ந்தமையும், கனகசித்திரனது பாடும் கண்டு - கனக சித்திரன் மாண்டமையும், கண்கூடாக் கண்டு, அங்கு ஒருவன் - அவ்விடத்தே எஞ்சிய மணிகண்டன் என்பான், அனல் படு மனத்தன் ஆயினான் - சினத்தீயாற் றீய்க்கப்பட்ட நெஞ்சமுடையவன் ஆயினான், (எ - று.) அச்சுவகண்டன் தம்பியருள் மூத்தவனாகிய மணிகண்டன் நிற்க ஏனையோரும் கனகசித்திரனும் மாண்டமை கண்டு மணிகண்டன் மிக்க சினமுடையன் ஆனான் என்க. | (288) | | |
|
|