மணிகண்டன் இறத்தல் | 1422. | தொடுத்ததுந் துரந்ததும் விடலை தோளிடை மடுத்ததுங் கிழித்தது மண்ணி னுட்புகக் கடுத்ததுங் கண்டுநின் றவர்க டம்மையும் படுத்தது பகலவன் பகழி யென்பவே. | (இ - ள்.) தொடுத்ததும் - அருக்ககீர்த்தி அவ்வம்பினை வில்லிலே தொடுத்ததையும், துரந்ததும் - அதனை ஏவியதையும், தோளிடை மடுத்ததும் - அது மணிகண்டன் தோளிற் பாய்ந்ததையும், கிழித்ததும் - அத்தோளைப் பிளந்ததையும், மண்ணின் உட்புக - நிலத்தில் ஊடுருவிச் செல்ல, கடுத்ததும் - மேலும் விரைந்ததையும், கண்டு நின்றவர்கடம்மையும் - அயனின்று பார்த்திருந்தோரையும், படுத்தது - கொன்றொழித்தது, பகலவன் பகழி என்ப - அவ்வருக்க கீர்த்தியின் அம்பு என்று - அறிந்தோர் உரைப்பர், (எ - று.) அவ்வம்பு, விடுத்ததையும் அது மணிகண்டன் தோள் துணித்ததையும் பின்னர் மண்ணினுட்குளித்ததையும் கண்டு நின்ற பகைவரையும் கொன்றதென்க. | (292) | | |
|
|