சண்டவேகையின் செயல் | 1428. | அணங்குகள் குழுமி யாமும் பெருவயி றார்து மென்று துணங்கைகோத் தாடி நக்குச் சுடரிலைச் சூல மேந்தி வணங்குபு சூழ மற்ற மாபெருந் தெய்வம் வந்து மணங்கமழ் சுரமை நாடன் றானைமேன் 3மடுத்த தம்மா. | (இ - ள்.) அணங்குகள் - அச்சண்டவேகையைச் சார்ந்த பேய்க்கணங்களும், குழுமி - ஒன்றுகூடி, யாமும் - யாங்களும் பெருவயிறு ஆர்தும் என்று - நம் பெரிய வயிறு நிறைய இன்று உண்ணக்கடவேம் என்று மகிழ்ந்து, கோத்து துணங்கை ஆடி நக்கு - கைகோத்துத் துணங்கைக்கூத்தினை யாடிப் பெருகச் சிரித்து, சுடர்இலைச் சூலம் ஏந்தி - ஒளிருகின்ற இலையினையுடைய சூலப்படையை ஏந்தியவாய், வணங்குபு - சண்டவேகையைத் தொழுது, சூழ - புறஞ்சூழ்ந்துவர, மற்ற மாபெருந் தெய்வம் - அந்தத் தலைமையுடைய பெரும்பேயாகிய சண்டவேகை, வந்து - விரைந்து வந்து, மணங்கமழ் சுரமைநாடன் தானைமேல் - நறுமணங்கமழும் பொழில்மிக்க சுரமை நாட்டு மன்னனாகிய திவிட்டனுடைய படையின்மேல், மடுத்தது அம்மா - தாக்கிற்று. அம்மா : அசை, (எ - று.) “பழுப்புடை யிருகை முடக்கி அடிக்கத் துடக்கிய நடையது துணங்கை யாகும்“. - (திருமுருகாற் - 56 உரை) கூளிகள், யாமும் பெருவயிறு ஆர்தும் என்று, கோத்தாடி நக்கு, ஏந்திச் சூழ, மற்ற மாபெருந்தெய்வம் வந்து நாடன் தானைமேல் மடுத்ததென்க. | (298) | | |
|
|