கூளிகளின் தன்மை | 1429. | பட்டடி நெடிய வீங்கு பரட்டின நொடிக்குங் கால ஒட்டிய வயிற்ற வற்ற லுகிரிடை மயிர முன்கை கட்டிய கண்ணி பீலித் தலையின கழற்காய் போல வட்டமா யுருளுங் கண்ண கணங்கள்வந் திரைத்த வன்றே. | (இ - ள்.) பட்டு அடி - பூமியிலே படும் உள்ளடி, நெடிய - நீளியவாயவும், வீங்குபரட்டின - பருத்த பரடுகளையுடையனவும், நொடிக்கும் கால - நுடங்குகின்ற கால்களையுடையனவும், ஒட்டிய வயிற்ற - முதுகோடொட்டிய வயிற்றை உடையனவும், வற்றல் - வற்றிய உடலுடையனவும், உகிரிடை மயிர முன்கை - நகங்களிடத்தே மயிர்செறிந்த முன் கைகளையுடையனவும், கட்டிய கண்ணி பீலித் தலையின - கட்டப்பட்ட முடிக்கண்ணியையும் மயிற்பீலியையும் சூட்டிய தலையுடையனவும், கழற்காய்போல வட்டமாய் உருளும் கண்ண - கழற்சிக் காயைப்போன்று வட்டவடிவினவாய் உருளாநின்ற விழிகளை உடையனவும் ஆகிய, கணங்கள் வந்து இரைத்த அன்றே - பேய்க்கணங்களும் அப்போர்க்களத்தே வந்து முழங்கின, அன்றே : அசை, (எ - று.) பட்டஅடி - பட்டடி என நின்றது. அடி நெடியவும் பரட்டினவும் காலவும் வயிற்றவும் மயிரையுடைய முன்கையவும் தலையினவும் கண்ணவுமாகிய கணம் வந்திரைத்தன என்க. | (299) | | |
|
|