இதுவுமது

1432. மருங்கவை புணர்த்த பின்னை
     வானக வளாக மெல்லாம்
கருங்கலொன் றகன்ற மேலாற்
     கவித்தது கவித்த லோடும்
இருங்கலி யுலக மெல்லா
     மிருள்கொள வெருவி நோக்கிப்
பொருங்கலி யரசர் தானை
     போக்கிட மற்ற தன்றே.
     (இ - ள்.) மருங்கவை புணர்த்த பின்னர் - பக்கத்தே அம் மாயத் தொழில்களைச்
செய்த பின்னர், வானக வளாக மெல்லாம் - விசும்பு வட்டம் முழுதையும், அகன்ற
கருங்கல் ஒன்று - அகலிதாய கரிய மலை ஒன்றனாலே மேலால் கவித்தது - மேற்புறத்தே
குடைபோன்று கவித்தது, கவித்தலோடும் - அவ்வாறு கவிழ்த்தவுடனே, இருங்கலி உலகம்
எல்லாம் - பெரிய ஆரவாரத்தையுடைய இவ்வுலக முழுதும், இருள்கொள - பேரிருள்
கவ்விக்கொண்டதாக, வெருவி நோக்கி - அஞ்சி நான்கு பக்கத்தும் நோக்கி, பெருங்கலி
அரசர்தானை - பெரிய முழக்கத்தையுடைய திவிட்டனைச்சார்ந்த அரசருடைய படை,
போக்கிடம் அற்றது அன்றே - தாம் உய்ந்து போதற்குரிய இடமும் பெறாதாயிற்று,
(எ - று.)

     இவ்வாறு செய்த பின்னர் மீண்டும் அச் சண்டவேகை அகன்ற ஒரு மலையைக்
கொணர்ந்து மேலே கவிழ்த்தது ஆதலால் உலகெலாம் இருண்டது. திவிட்டன் படைஞர்
உய்ந்து போதற்கு இடமும் பெறாதவராயினர் என்க.   

(302)