அந்நகரில் எவருங் கட்டுண்டு வருந்தார்

144. மாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல்
நோக்கி 1வைக நுனித்தவ னாண்டநாள்
தாக்க ணங்கனை யார் 2தம தாயரால்
வீக்கப் பட்டன 3மென்முலை விம்முமே.
 

     (இ - ள்.) மாக்கண் வையம் - பேரிடத்தையுடைத்தாகிய இவ்வுலகத் துயிர்கள்;
மகிழ்ந்து தன் தாள் நிழல் நோக்கி வைக - மகிழ்ச்சியுடன் தன் அடி நிழலிலே
தங்கியிருக்கும்படி; நுனித்து அவன் ஆண்டநாள் - நுட்பமான உணர்வுடன் அவன்
அரசாட்சி செய்த காலத்திலே; தாக் கணங்கு அனையார் மென்முலை - தீண்டி வருத்தும்
தெய்வ மகளிரை ஒத்த மங்கையரின் மெல்லிய கொங்கைகள்; தம தாயரால் - தம்முடைய
தாயார்களுடைய கையினால்; வீக்கப் பட்டன விம்மும் - கட்டுப்பட்டவைகளாக
வருந்துதலை யடையும், (எ - று.)

     சுவலனசடியின் ஆட்சிக் காலத்தில் அந்நாட்டிற் கட்டப்பட்டு வருந்தினார் எவரும்
இலர். கட்டப்பட்டு வருந்துதலை யடைந்தவைகள் அழகிய மங்கையர்களின் கொங்கைகளே
என்க.
 

( 26 )

?@