திவிட்டன்பால் கருடன் வந்து எய்துதல் | 1443. | வாய்ந்தநல் வயிரத் துண்டம் வளைந்தொளிதுளும்ப வள்ளாற் சேந்தன சிறுக ணோடு திசைமுகஞ் சிறகு தம்மால் வேய்ந்தென விரித்து வீசி விசும்பிடை யிழிந்து வந்து காய்ந்தெரி கணையி னாற்குக் கருடனு முழைய னானான். | (இ - ள்.) வாய்ந்த நல் வயிரத்துண்டம் - பொருந்திய நல்ல வயிரமணி போன்ற உறுதியுடைய அலகு, வளைந்து ஒளி துளும்ப - வளைவுடனே ஒளிவீசாநிற்ப, சேந்தன வள் ஆல் சிறுகணோடு - சிவந்தனவாய்க் கூரிய நோக்குடைய சிறிய கண்களோடே, சிறகு தம்மால் - தன் இரண்டு சிறகுகளாலும், திசை முகம் வேய்ந்தென, திக்குகளை மூடினாற்போல, விரித்து - பரப்பி, வீசி - அடித்து, விசும்பிடை இழிந்து வந்து - வானத்தினின்றும் இறங்கி வந்து, கருடனும் - கருடன் என்னும் பறவைவேந்தனும், காய்ந்து எரிகணையினாற்கு - சினந்து சுடுதலையுடைய அம்புகளையுடைய திவிட்டனுக்கு, உழையன் ஆனான் - அணுக்கன் ஆயினான், (எ - று.) வள் - கூர்மை. ஆல் : அசை. அப்பொழுது அலகு ஒளிவீசச் சிறகுகள் திசையை மூட விரித்து வீசியவனாய் வானிடத்தேயிருந்து இறங்கிக் கருடனும் நம்பிபால் எய்தினான் என்க. | (313) | | |
|
|