அச்சுவகண்டன் அரவக்கணை விடுதல் | 1451. | காயிரும் பனைய வெய்யோன் கருமணி வண்ணன் றன்மேல் ஆயிரம் பணத்த தாய வருமணி யாடு நாக மாயிரும் புகழி னான்றன் வன்சிலை 1வாங்கி யெய்யச் சேயிருஞ் சுடர்கள் சிந்தித் தீயுமிழ்ந் தோடிற் றன்றே. | மாயிரும் புகழி னான்றன் வன்சிலை 1வாங்கி யெய்யச் சேயிருஞ் சுடர்கள் சிந்தித் தீயுமிழ்ந் தோடிற் றன்றே. (இ - ள்.) காய் இரும்பு அனைய வெய்யோன் - பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புபோன்ற கொடியவனாகிய அச்சுவகண்டன், கருமணிவண்ணன் தன்மேல் - நீலமணி போன்ற நிறமுடைய திவிட்டன்மேல், ஆயிரம் பணத்ததாய - ஓராயிரம் படங்களையுடையதாகிய, அருமணி ஆடும் நாகம் - பெறற்கரும் மணியையுடைய ஆடுகின்றதொரு பாம்பாகிய அம்பினை, மாயிரும் புகழினான்றன் வன்சிலை - மிக்க புகழையுடைய தனது வலிய வில்லை, வாங்கி எய்ய - வளைத்து எய்ய, சேய் இருஞ்சுடர்கள் சிந்தி - சிவந்த பெரிய ஒளிச்சுடரைச் சிதறி, தீயுமிழ்ந்து ஓடிற்று - தீக்கான்று பாய்ந்தது, அன்று, ஏ : அசைகள், (எ - று.) அச்சுவகண்டன் ஆயிரந் தலையையுடைய அரவக் கணையை நம்பி மேற் றொடுத்தான் அது தீயைச் சிதறிக்கொண்டு நம்பிமேல் வந்ததென்க. | (321) | | |
|
|