1466. தானெறிந்த நேமி தனக்கே 1பகையாகித்
தேனெறிந்த தாரான் சிறுவரைக்கண் 2வீடினான்
யானறிந்த வாற்றா லெளிய வுலகத்தில்
வானறிந்த 3வாழ்க்கையு மாயமே போலுமால்.
     (இ - ள்.) தான் எறிந்த நேமி - தன் பகைவனைக் கொல்லும் பொருட்டுத் தான்
ஏவிய தன்னுடைய ஆழிப்படை, தனக்கே பகையாகி - தன்னையே கொல்லும் பகையாக
மாறிவிட, தேன் எறிந்த தாரான் - தேன் துளிக்கும் மலர்மாலையை அணிந்த
அச்சுவகண்டன், சிறுவரைக்கண் - சிறியதொரு கால எல்லையினகத்தே, வீடினான் -
மாண்டொழிந்தான், யான் அறிந்தவாற்றால் - என்னுடைய சிற்றறிவானே யான் அறிந்து
கொள்ளுந்துணை, எளிய இவ்வுலகத்தில் - ஏழ்மையுடைய இம்மண்ணுலகத்தே, வான்
அறிந்த வாழ்க்கையும் மாயமே - தேவர்கள் அறியச் சிறப்புற்றமர்ந்த வாழ்க்கையும்
பொய்யே ஆயிற்று, போலும் : ஒப்பில் போலி, (எ - று.)

     மாயவித்தையைப் போன்ற தெனினும் ஆம்.

     “மணி மாடம் மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே
     வந்ததோர் வாழ்வு மோர் இந்திரசாலக் கோலம்“
     என்பர் தாயுமானார்.

(336)