அச்சுவகண்டன் உடலைத் தீயிலிடல் | 1483. | மஞ்சு தோயும் வரையார்த மன்னன் றன்னை மதயானை 2அஞ்சு தோன்ற நுதலினிழித் தந்த ணாளர் மெய்தீண்டிப் பஞ்சுந் துகிலும் பூம்பட்டும் பாயபள்ளி படுத்ததன்மேல் வஞ்ச மில்லாப் புகழானை வயங்கு செந்தீ வாய்ப்பெய்தார். | (இ - ள்.) மஞ்சு தோயும் வரையார் தம் மன்னன்றன்னை - முகில்கள் படியாநின்ற மலையிடத்தே வாழும் விஞ்சையருடைய வேந்தனாகிய அச்சுவகண்டன் உடலை, அஞ்சுதோன்ற - தம் அச்சம் தோன்றுமாறு, மதயானை நுதலின் இழித்து - யானையினது நெற்றியினின்றும் அகற்றி, அந்தணாளர் - பார்ப்பனர்கள், மெய்தீண்டி - அவ்வுடலைத் தம் கையாலே பற்றி, பஞ்சும் - மெல்லிய பஞ்சினையும், துகிலும் - வெண்டுகிலையும், பூம்பட்டும் - அழகிய பட்டினையும், பாய - பரப்பியுள்ள, பள்ளிபடுத்து - படுக்கையை விரித்து, அதன்மேல் - அப்படுக்கையின்மேல், வஞ்சமில்லாப் புகழானை - மெய்யாய புகழுடைய அச்சுவகண்டனை, வயங்கு செந்தீவாய் - ஒளிர்கின்ற செவ்விய தீயிடத்தே, பெய்தார் - இட்டனர், (எ - று.) அந்தணாளர் அச்சுவகண்டன் உடலைத் தீண்டிப் பஞ்சும் துகிலும் பட்டும் பரப்பிய பள்ளியின் மேலே கிடத்திச் செந்தீப் பெய்தார் என்க. அஞ்சு - அச்சம். அந்தணாளர் ஆகலின் அத்தீயோன் பிணத்தையும் அஞ்சினர் என்பார் ‘அஞ்சுதோன்ற இழித்தனர்’ என்றார். | (353) | | |
|
|