திவிட்டன் பாசறை எய்துதல் | 1490. | கருமுகில் வண்ணனுங் 1கருடன் மேலிழிந் துருமென வதிர்தரு மோடை யானைமேற் பொருமிகல் வேந்தர்போற் றிசைப்பப் போந்தரோ பரிமிகு படைவிடு பாடி நண்ணினான். | (இ - ள்.) கருமுகில் வண்ணனும் - இவ்வாறு கட்டளையிட்டருளிய பின்னர்த் திவிட்டநம்பியும், கருடன்மேல் இழிந்து - கருடவூர்தியினின்றும் இறங்கி, உரும் என அதிர்தரும் - இடி போலப் பிளிறுகின்ற, ஓடையானை மேல் - முகபடா மணிந்த யானையின் மேலே, பொரும் இகல் வேந்தர் போற்று இசைப்ப - தன்னைப் போரிட்டழித்தற்கு வந்த பகைவராகிய விச்சாதர மன்னரே புகழ்ந்து வாழ்த்தெடுப்ப, போந்து - வந்து, பரிமிகு படைவிடு பாடி நண்ணினான் - புரவிகள் மிக்க படைகள் தங்கும் பாசறையை எய்தினான், (எ - று.) நம்பி முரசறைய ஏவிய பின்னர்க் கருடன் தோளினின்றும் இறங்கி யானையேறி மன்னர் போற்றெடுப்பப் படைவீட்டை எய்தினான் என்க. | (360) | | |
|
|