திவிட்டன் பாசறை எய்துதல்

1490.

கருமுகில் வண்ணனுங் 1கருடன் மேலிழிந்
துருமென வதிர்தரு மோடை யானைமேற்
பொருமிகல் வேந்தர்போற் றிசைப்பப் போந்தரோ
பரிமிகு படைவிடு பாடி நண்ணினான்.
     (இ - ள்.) கருமுகில் வண்ணனும் - இவ்வாறு கட்டளையிட்டருளிய பின்னர்த்
திவிட்டநம்பியும், கருடன்மேல் இழிந்து - கருடவூர்தியினின்றும் இறங்கி, உரும் என
அதிர்தரும் - இடி போலப் பிளிறுகின்ற, ஓடையானை மேல் - முகபடா மணிந்த
யானையின் மேலே, பொரும் இகல் வேந்தர் போற்று இசைப்ப - தன்னைப்
போரிட்டழித்தற்கு வந்த பகைவராகிய விச்சாதர மன்னரே புகழ்ந்து வாழ்த்தெடுப்ப, போந்து
- வந்து, பரிமிகு படைவிடு பாடி நண்ணினான் - புரவிகள் மிக்க படைகள் தங்கும்
பாசறையை எய்தினான், (எ - று.)

     நம்பி முரசறைய ஏவிய பின்னர்க் கருடன் தோளினின்றும் இறங்கி யானையேறி
மன்னர் போற்றெடுப்பப் படைவீட்டை எய்தினான் என்க.

(360)