பயாபதி மக்களின் முடிசூட்டுவிழவினைக்
காண விழைதல்

1493. தீதறு மணிமுடிச் செல்வக் காளையர்
தாதையென் 1றியலுரை தவத்தி னெய்தினேன்
ஆதலா 2லிவர்தம தரச கோலமெங்
காதலங் கண்ணிவை காண 3லாகுமே.
 
     (இ - ள்.) தீதறு மணிமுடிச் செல்வக் காளையர் - குற்றமற்ற மணிகளானியன்ற
கோமுடியினை உடைய செல்வமிக்க இவ் விசய திவிட்டர்களின், தாதை என்று -
தந்தையாவான் பயாபதி என்னும், இயலுரை - நிகழாநின்ற புகழ்மொழியை, தவத்தின் -
மேலைத்தவப்பயனானே, எய்தினேன் - பெற்றுள்ளேன். ஆதலால் - ஆகையாலே, இவர்
தமது -இவருடைய, அரசகோலம் - திருமுடி சூட்டும் எழிலும், காதலங்கண் இவை - காண
வேணவாவுடைய இந்தக் கண்கள், காணல் ஆகுமே - கண்டு மகிழ்தலும் இயல்வதேயாம்,
(எ - று.)

     இவர்க்குத் தாதையாக்கிய தவம், இதனையும் காட்டுமாகலின், காணலாகும் என்றான்
என்க.

(363)