சங்கநிதி பதுமநிதிகள் கருவூலத்தை எய்துதல் | 1504. | மிக்கெரி சுடர்முடி சூடி வேந்தர்க டொக்கவ ரடிதொழத் தோன்றுந் தோன்றலா லக்கிரப் பெருஞ்சிறப் பெய்தி யாயிடைச் சச்கரப் பெருஞ்செல்வச் சாலை சார்ந்தவே. | (இ - ள்.) மிக்கு எரிசுடர் முடிசூடி - மிக்கொளிர்கின்ற சுடரையுடைய முடிக்கலன் அணிந்தவனாய், வேந்தர்கள் தொக்கவர் அடிதொழ - அரசர்கள் தன்னைச்சூழ்ந்து குழாங்கொண்டு தன் அடிகளை வணங்குமாறு, தோன்றும் - விளங்குகின்ற, தோன்றலால் - திவிட்ட நம்பியாலே, அக்கிரப் பெருஞ்சிறப்பு எய்தி - அக்கிரபூசனை செய்யப் பெற்று, ஆயிடை - அப்பொழுது, சக்கரப் பெருஞ் செல்வம் சாலை சார்ந்தவே - சக்கரவர்த்திகட்குரியவாய பெரிய அம்மாநிதிகள் பயாபதியின் கருவூலத்தைச் சார்ந்தன, (எ - று.) அக்கிரப் பெருஞ்சிறப்பு - முதன்மையான வழிபாடு. சக்கரப் பெருஞ்செல்வம் என்றது சங்கநிதி பதுமநிதிகளை. சங்கநிதி பதுமநிதிகள் நம்பியால் நன்கு வழிபாடு செய்யப்பெற்று அரண்மனைக் கருவூலத்தை எய்தின என்க. | (374) | | |
|
|