சங்கநிதி பதுமநிதிகள் கருவூலத்தை எய்துதல்

1504. மிக்கெரி சுடர்முடி சூடி வேந்தர்க
டொக்கவ ரடிதொழத் தோன்றுந் தோன்றலா
லக்கிரப் பெருஞ்சிறப் பெய்தி யாயிடைச்
சச்கரப் பெருஞ்செல்வச் சாலை சார்ந்தவே.
     (இ - ள்.) மிக்கு எரிசுடர் முடிசூடி - மிக்கொளிர்கின்ற சுடரையுடைய முடிக்கலன்
அணிந்தவனாய், வேந்தர்கள் தொக்கவர் அடிதொழ - அரசர்கள் தன்னைச்சூழ்ந்து
குழாங்கொண்டு தன் அடிகளை வணங்குமாறு, தோன்றும் - விளங்குகின்ற, தோன்றலால் -
திவிட்ட நம்பியாலே, அக்கிரப் பெருஞ்சிறப்பு எய்தி - அக்கிரபூசனை செய்யப் பெற்று,
ஆயிடை - அப்பொழுது,
 
     சக்கரப் பெருஞ் செல்வம் சாலை சார்ந்தவே - சக்கரவர்த்திகட்குரியவாய பெரிய
அம்மாநிதிகள் பயாபதியின் கருவூலத்தைச் சார்ந்தன, (எ - று.)

     அக்கிரப் பெருஞ்சிறப்பு - முதன்மையான வழிபாடு.
சக்கரப் பெருஞ்செல்வம் என்றது சங்கநிதி பதுமநிதிகளை.

     சங்கநிதி பதுமநிதிகள் நம்பியால் நன்கு வழிபாடு செய்யப்பெற்று அரண்மனைக்
கருவூலத்தை எய்தின என்க.

(374)