திவிட்டன் அவையில் புலவர்கள் வரலாறு கூறுதல்

1506. முரசுவீற் றிருந்ததிர் மூரித் தானைய
னரசுவீற் றிருந்தனன் பின்னை யாயிடைக்
கரைசெய்நீர்க் கருங்கடல் வேலி காவலற்
குரைசெய்நூற் சரிதைகள் புலவ ரோதினார்.
     (இ - ள்.) முரசு - வெற்றி முரசம், வீற்றிருந்து - ஒழியாதே இருந்து, அதிர் -
முழங்குகின்ற, மூரி - பெரிய, தானையான் - படையை உடைய திவிட்டநம்பி, அரசு
வீற்றிருந்தனன் - அரியணை அமர்ந்து கோலோச்சுவானாயினன், பின்னை - அப்பால்,
ஆயிடை - அவ்வோலக்க மண்டபத்தே, கரைசெய் நீர்க்கருங் கடல்வேலி - அலைகளாலே
முழங்குதலைச் செய்கின்ற கடலை வேலியாகவுடைய உலகத்தை, காவலற்கு - காவல்
செய்கின்ற திவிட்ட வேந்தனுக்கு. புலவர் - நல்லிசைப் புலவர்கள் உரை செய் நூற்
சரிதைகள் - புகழ்தற்குரிய மெய்நூல்களிலே கூறப்படும் வரலாறு களை, ஓதினர் -
கூறுவாராயினர், (எ - று.)

     வெற்றிமுரசம் முழங்க அரசு வீற்றிருந்த நம்பிக்கு, புலவர்கள் நூற் சரிதைகள் ஓதினர்
என்க.

 (375)