திவிட்டன் குன்றெடுக்கச் செல்லல்

1511. அறிபவ ரவையவை மொழியக் கேட்டலும்
நெறிபடு 1நீதிமே னிறைந்த சிந்தைய
னெறிகடற் படையினோ டெழுந்து சென்றரோ
குறுகினன் கோடிமா சி2லைவன் குன்றமே.
     (இ - ள்.) அறிபவர் - புலமையாளர், அவை - அவ்வரசவையின்கண், அவை -
அப்புராணப் பொருள்களை, மொழியக் கேட்டலும் - எடுத்து விளம்பக் கேட்டவுடனே,
நெறிபடு நீதி மேல் நிறைந்த - வரலாற்று முறையிலே வரும் அவ்வாசுதேவர் செயலாகிய
நீதிமேல் தானும் செல்லுதலையே எண்ணிய, சிந்தையன் - நெஞ்சத்தையுடையனாய், எறிகடற்
படையினோடு அலை வீசுகின்ற கடல்போன்ற பெரும்படையோடே, எழுந்து சென்று -
அரண்மனையினின்றும் புறப்பட்டுப்போய், மா சிலை வன்கோடிக்குன்றம் குறுகினன் -
பெரிய எதிரொலியையும் வன்மையையுமுடைய கோடிக்குன்றம் என்னுமொரு மலையினை
எய்தினான், (எ - று.)

     சிலை - ஒலி - கல்லுமாம்.

     பண்டு புராணத்தே கூறப்பட்ட வாசுதேவர் குன்றமெடுத்துப் புகழ் கொண்டவாறு
யானும் குன்ற மெடுப்பல் என நம்பி படையினோடே கோடிக்குன்றத்தை எய்தினான் என்க.

(381)