வேறு

1518. பொருமாலை வேலரசர் போற்றிசைப்பப் பூவின்
அருமா மழைபெய் தமருலக மார்ப்பக்
கருமா னெடுவரையோர் கைத்தலத்தி னேந்தித்
திருமா மணிவண்ணன் செம்மாந்து நின்றான்.
     (இ - ள்.) பொரு மாலை வேல் அரசர் - போர் செய்யும் இயல்புடைய
வேல்வேந்தர்கள், போற்றிசைப்ப - புகழ்ந்து வாழ்த்துக்கூற, பூவின் அருமா மழை - கற்பக
மலராலாய பெறற்கரிய பெரிய மழையினை, அமரர் பெய்து - தேவர்கள் பொழிந்து,
ஆர்ப்ப - ஆரவாரிப்ப, கரு மா நெடு வரை ஓர் கைத்தலத்தின் ஏந்தி - கரிய பெரிய
நீளிதாய கோடிக் குன்றத்தைத் தன் ஒரு கையாலே ஏந்தியவனாய், திருமா மணிவண்ணன் -
திருமகள் முயங்கும் சிறந்த நீலமணி நிறமுடையனாகிய திவிட்டன், செம்மாந்து நின்றான் -
வீறுகொண்டு விளங்கினான் (எ - று.)

     மணிவண்ணனாகிய நம்பி, அரசர் போற்ற, அமரர் மலர் மாரி தூற்ற, கரிய அந்
நெடுங்குன்றைத் தன்னொரு கைத்தலத்தே ஏந்தி, வீறுடன் நின்றான் என்க.

 (388)