திவிட்டனை நகரம் எதிர்கொள்ளல் | 1528. | சூழிணர்மென் மல்லிகையும் வளையமுமின் சூட்டுமெழி றுதையச் சூட்டி யாழகவி மணிவண்டு மணிஞிமிறு மதுகரமு மிசைப்பச் செய்ய காழகிலு நறுஞ்சாந்துங் கடிவாசப் பூப்பொடியுங் கமழ்ந்து கைபோய் ஏழுலகு மணங்கொடுப்ப வெழினகரா ரெதிர்கொள்ள விறைவன் புக்கான். | (இ - ள்.) சூழ் இணர் மென் மல்லிகையும் - ஆராய்ந்தெடுத்த மெல்லிய மல்லிகை மலரின் கொத்தாலியன்ற மாலைகளையும், வளையமும் - வளையல்களையும், மின்சூட்டும் - மின்னும் நெற்றிப் பட்டங்களையும், எழில் துதைய - அழகு பெருக, சூட்டி - அணிந்து கொண்டவராய், யாழ் அகவி - யாழ்இசை போலே பாடி, மணிவண்டும் - நீலமணி போன்ற வண்டுகளும், அணிஞிமிறும் - அழகிய ஞிமிறுகளும், மதுகரமும் - மதுகரங்களும், இசைப்ப - இசையெழுப்பி, செய்ய காழ் அகிலும் - செவ்விய நிறமுடைய அகிலிடு நறும்புகையும், நறுஞ்சாந்தும் - நறுமணங்கமழும் சந்தனமும், கடிவாசப்பூம் பொடியும் - மிக்கமணமுடைய பொடிகளும், கமழ்ந்து - நறுமணம் கமழ்ந்து, கைபோய் - மிக்குச்சென்று, ஏழுலகும் மணங்கொடுப்ப - மேலேழுலகத்தும் நாறா நிற்ப, எழில்நகரார் - அழகிய நகர்வாழ் மாந்தர், எதிர்கொள்ள - எதிர்கொண்டு வரவேற்ப, இறைவன் புக்கான் - மன்னனாகிய திவிட்டன் நகரத்தே புகுவானாயினன், (எ - று.) வண்டும் ஞிமிறும் மதுகரமும் - தேன் வண்டுகளின் வகைகள். காழ் - வயிரமுமாம். மல்லிகையும் வளையலும் சூட்டும் சூட்டி அகவி இசைப்ப மணங்கொடுப்ப நகரார் எதிர்கொள்ள நம்பி புக்கான் என்க. | (398) | | |
|
|