அருகக் கடவுள் திருக்கோயில் விழாவயர்ந்து
நகரம் மகிழ்தல்

1554. திருவமர் தாமரைச் செம்பொ னாயிதழ்
மருவிய திருவடி வாமன் பொன்னகர்
விரவிய விழவொடு வேள்விக் கொத்தரோ
கருவிய வளநகர் கண்கு ளிர்ந்ததே.
     (இ - ள்.) திருவமர் - திருமகள் விரும்புதற்குரிய, செம்பொன் ஆய்இதழ் - செவ்விய
பொன்னிறமமைந்த நுணுகிய இதழ்களையுடைய, தாமரை மருவிய - தாமரை மலரிடத்தே
பொருந்திய, திருவடி வாமன் - திருவடிகளையுடைய அருகபரமனுடைய, பொன்னகர் -
அழகிய திருக்கோயில்களிடத்தே, விரவிய விழவொடு வேள்விக்கு ஒத்து - பொருந்திய
விழாவுடனே விருந்தோம்பல் முதலிய உதவித் தொழிலிலே உளம் இயைந்து, கருவி அ வளநகர் - பல்வேறு தொகுதிகளையுடைய அந்த
வளமிக்க போதனமாநகரம், கண்குளிர்ந்ததே - கண்கள் குளிர்தற்குக் காரணமான
மகிழ்ச்சியை அடைந்தது, (எ - று.)

     நம்பியின் ஆட்சியிற்பட்ட வளநகரும் அருகபரமேட்டிக்கு விழாவெடுத்து
இல்லறத்தார்க்கு உரிய வேள்வியியற்றி நன்கு மகிழ்ந்ததென்க. கண்குளிர்தற்குக் காரணமான
மகிழ்ச்சியைக் காரியத்தின் மேலேற்றிக் கூறினார். வேள்வி - ஈண்டு இல்லறத்தார்க்குரிய
விருந்தோம்புதலாகிய அறமென்க. .

(424)