1558. தேங்கமழ் தெய்வச் செம்பொற்
     றாமரை சுரிவெண் 1சங்க
மீங்கிவை நெதிக ளாக
     2வேழர தனங்க ளெய்தி
யாங்கமர் செல்வந் 3தம்மா
     லற்றைக்கன் றமர்ந்த மாதோ
வோங்கின னுருவத் தாலும்
     வில்லெண்ப துயர்ந்த தோளான்.
     (இ - ள்.) உருவத்தாலும் - திருமேனியினாலும், எண்பது வில் உயர்ந்த தேளான் -
எண்பது வில்லின் அளவு உயர்ந்த தோளையுடைய திவிட்டன், தேம் கமழ் தெய்வச்
செம்பொற்றாமரை - தேன்மணங்கமழும் கடவுட்டன்மை யுடைய பதும நிதியும்,
சுரிவெண்சங்கம் - சுரிந்த முகத்தையுடைய சங்கநிதி யும், ஈங்கிவை - என்று கூறப்படுகின்ற
இரண்டும், நெதிகளாக - தன் கருவூல முதற்பொருளாய் அமைய, ஏழரதனங்கள் எய்தி
-இருகூற்று ஏழுமணிகளையும் பெற்று, அற்றைக்கன்று - நாள்தோறும், ஆங்கு அமர்
செல்வம் தம்மால் - ஆண்டு உள்ளனவாகிய செல்வமாகிய, இருவகை நிதிகளாலும்,
அமர்ந்த - தாம் விரும்பிய விரும்பியபடியே எய்தி, ஓங்கினன் - சிறந்தான், (எ - று.)

     இருவகைய எவ் வேழுமணிகளாவன, உயிர் மணியேழும் உயிரில்மணி ஏழுமாம்,
அவையாவன:- கிரகபதி, சேனாபதி, விஸ்வகர்மா, புரோகிதன், அசுவம், கஜம், ஸ்திரீ.
இவ்வேழும் சீவரத்னமென்ப; சக்கரம், குடை, வாள், தண்டம், சூடாமணி, சர்மம், காகிணி -
இவ் வேழும், அசீவ ரத்ன மென்ப.

     புகழானே யன்றி உருவத்தாலும் எண்பது வில்லுயர்ந்த நம்பி என்க. வில், ஓர் அளவு
கருவி. “ஐவிலின் கிடக்கை“ என்றார் மணிமேகலையினும். எய்தி என்னும் சொல் பின்னும்
கூட்டப்பட்டது.

 (428)