அவ் விதூடகன் இயல்பு | 1565. | .காதுபெய் குழையுஞ் செம்பொற் சுருளையுங் கலந்து மின்னப் போதலர் குஞ்சி யாங்கோர் பூந்துணர் வடத்தின் வீக்கி யோதிய மருங்கு றன்மே லொருகைவைத் தொருகை தன்னால் மீதியல் வடகம் பற்றி வெண்ணகை 3நக்கு நின்றான். | (இ - ள்.) காது பெய் குழையும் - செவியிலே இடப்பட்ட குண்டலங்களும், செம்பொன் சுருளையும் - செம்பொன்னாற் செய்யப்பட்ட குதம்பையும், கலந்துமின்ன - சேர்ந்து ஒளிர, போது அலர்குஞ்சி - விரிந்த மலர் செருகிய தலைமயிரினை, ஆங்குஓர் பூந்துணர் வடத்தின் வீக்கி - அவ்விடத்தே கிடைத்த ஒரு பூங்கொத்தாலியன்ற மாலையாலே வரிந்து, ஓதிய மருங்குல் தன்மேல் ஒருகை வைத்து - கூறப்பட்ட இடையிலே ஒரு கையை இயைத்து, ஒருகை தன்னால் - மற்றொரு கையாலே, மீதியல் வடகம் பற்றி - உடலின் மேலதாகிய பூம்போர்வையைப் பிடித்துக்கொண்டு, வெண்ணகை நக்கு - வெளிற்றுச் சிரிப்புச் சிரித்து, நின்றான் - நிற்கலானான், (எ - று.) வெண்ணகை - பொருள்படாத வறுநகை, வடகம் - மேலாடை. ('வெள்ளைமகன் போல் விலாவிற நக்கு') என்றார் பிறரும். | (435) | | |
|
|