விதூடகன் வயிற்றைப் பற்றிக்கொண்டு
தரையில் புரளுதல்

1568.

காது கொண்டன கனபொற் குழைசோர
மீது கொண்ட வடகம் புடை 3மேவ
4வாதி யாதிமு ழுகும்வயி றென்னாப்
பூதி மீதுபு ரளாநரல் கின்றான்.
     (இ - ள்.) காதுகொண்டன கனபொன் குழைசோர - விகடன் தன் காதுகளிலே
அணியப் பெற்ற கனவிய பொன் குண்டலங்கள் நழுவா நிற்பவும், மீதுகொண்ட வடகம் -
மேனியிலே கிடந்த மேலாடை, புடைமேவ - ஒரு பக்கத்தே நெகிழ்ந்து போகவும், பூதிமீது
புரளா - கீழேவீழ்ந்து புழுதியிலே புரள்வானாய், முழுகும் வயிறு - மோதகங்கள்
முழுகப்பெற்ற என் வயிறே, வாதியாதி - என்னை வருத்தாதே கொள், என்னா - என்று
கூறி, நரல்கின்றான் - புலம்புவான் ஆயினன், (எ - று.)

     வாதியாதி - வாதியாதே! வயிறு : விளி. வாதித்தல் - துன்புறுத்தல்.

     அவ்வாறு ஆடுகின்றவன், புழுதியிலே விழுந்து குழைசோரவும், போர்வை நெகிழவும்,
வயிறே என்னை வருத்தாதே கொள்! என்று புலம்பினான் என்க.

(438)