இதுவுமது | 1573. | வாதம் வெல்லும் வகையா ததுவென்னில் ஓதி 1வெல்ல லுறுவார்களை யென்கை 2கோது கொண்ட வடிவிற் றடியாலே மோதி வெல்வ னுரைமுற் றுறவென்றான். | (இ - ள்.) வாதம் வெல்லும் வகை யாது என்னில் - நீ வாதத்திலே எவ்வாற்றால் வெல்வாய் என்று வினவின், அது - அஃதாவது, ஓதி வெல்லல் உறுவார்களை - வேதமொழிகளை விளம்பி என்னை வெல்லத் தொடங்கும் அப்பிராமணர்களை, என்கை - யான் எனது கையிலே கொண்டுள்ள, கோதுகொண்ட வடிவிற் றடியாலே - வளைவினையுடைய வடிவிற்றாய இந்தத் தடியாலே, உரைமுற்றுற - அவர்கள் மொழி முடிந்து போகும்படி, மோதி - தாக்கி, வெல்வன் என்றான் - வென்று விடுவேன் என்று கூறினான், (எ - று.) கோது - ஈண்டு வளைவு. வேதம் வல்வரை நீ எவ்வாறு வெல்வாய் என வினவுதியாயின் கூறுவல், வாய்மொழியாலே ஓதி ஓதி வெல்ல முற்படும், அவ் வேதியரை, யான் என் கையிலுள்ள வளைதடியாலே நன்கு மோதி மோதி அவர் வாய்திறவாதவாறு செய்து வெல்வேன் என்றான் என்க. | (443) | | |
|
|