இதுவுமது

1573.  வாதம் வெல்லும் வகையா ததுவென்னில்
ஓதி 1வெல்ல லுறுவார்களை யென்கை
2கோது கொண்ட வடிவிற் றடியாலே
மோதி வெல்வ னுரைமுற் றுறவென்றான்.
     (இ - ள்.) வாதம் வெல்லும் வகை யாது என்னில் - நீ வாதத்திலே எவ்வாற்றால்
வெல்வாய் என்று வினவின், அது - அஃதாவது, ஓதி வெல்லல் உறுவார்களை -
வேதமொழிகளை விளம்பி என்னை வெல்லத் தொடங்கும் அப்பிராமணர்களை, என்கை -
யான் எனது கையிலே கொண்டுள்ள, கோதுகொண்ட வடிவிற் றடியாலே -
வளைவினையுடைய வடிவிற்றாய இந்தத் தடியாலே, உரைமுற்றுற - அவர்கள் மொழி
முடிந்து போகும்படி, மோதி - தாக்கி, வெல்வன் என்றான் - வென்று விடுவேன் என்று
கூறினான், (எ - று.)

     கோது - ஈண்டு வளைவு.

     வேதம் வல்வரை நீ எவ்வாறு வெல்வாய் என வினவுதியாயின் கூறுவல்,
வாய்மொழியாலே ஓதி ஓதி வெல்ல முற்படும், அவ் வேதியரை, யான் என் கையிலுள்ள
வளைதடியாலே நன்கு மோதி மோதி அவர் வாய்திறவாதவாறு செய்து வெல்வேன்
என்றான் என்க.

(443)