1578. | சந்து மாவொடு தடாயிட மெல்லாங் கொந்து தேனொடு குலாயிணர் கூடி வந்து தாழ்ந்துமது மாரி தயங்கித் தந்து தாதுபொழி யும்பொழி றானே. | (இ - ள்.) சந்து மாவொடு தடாய் - சந்தன மரங்கள் மாமரங்களோடே வளைந்து, இடம்எல்லாம் - அப்பொழிலிடம் எங்கும், கொந்து தேனொடு குலாய் - கூட்டமாகிய வண்டுகளோடே பொருந்தி, இணர்கூடி - பூங்கொத்துக்களும் தழைக் கொத்துகளும் மிக்கு, வந்து தாழ்ந்து - வளைந்து கீழே தணிந்து, மதுமாரி தயங்கி - தேன்மழை பொழிதலாலே விளக்கமுற்று, பொழில் தான் - அப்பொழில், தாதுதந்து பொழியும் - பூந்துகள்களை மிகுதியும் உதிர்க்கும், தான், ஏ : அசைகள், (எ - று.) தடாய் - வளைந்து. அப்பொழில் சந்தனமரமும், மாமரமும் நெருங்கி வளைந்து தேனோடு குலாய்த் தாழ்ந்து மதுமாரி தயங்கித் தாதுக்களை மிகப் பொழியும் என்க. | (448) | | |
|
|