(இ - ள்.) கூடி வண்டு குடையும் குளிர் காவில் - குழாங் கொண்டு வண்டுகள் மலர் கிண்டும் குளிர்ந்த பூம்பொழிலின் கண், ஓடி மண்டி வருவான் - ஓடிச் சுழன்று வருகின்ற விதூடகன், ஒருபாலால் - ஆண்டொரு சார், சேடுகொண்ட கனி - அழகுமிக்க கனிகள், சிந்தின கண்டு - சிதறி வீழ்ந்தவற்றைப் பார்த்து, மூடு கொண்ட மதியான் - அறியாமையால் மூடப்பட்ட மனத்தையுடைய அப்பார்ப்பனன், முனிவுற்றான் - சினங் கொள்வானாயினன், (எ - று.)குளிர்ந்த பொழிலிடத்தே ஓடி மண்டி வரும் வேதியன் ஒரு புறத்தே சிறந்த கனிகன் உதிர்வன கண்டு அறியாமையாற் சினங்கொண்டான் என்க. சினத்தற்குக் காரணம் வருகின்ற செய்யுள்களிற் காண்க. மூடுகொண்ட மதி - அறியாமையுடையமதி. |