நம்பியின் விடை

1592. 1இலைத்தலை யீர்ந்தளி ரல்ல வீங்கிதன்
மலைத்தகு வயவுநோ 2ய் தீர வைத்தன
கலைத்தலை மகளிர்தங் காமர் சீறடி
அலத்தகச் சுடரென வறியக் காட்டினான்.
     (இ - ள்.) இலைத்தலை ஈர்ந்தளிர் அல்ல - இலைக்கு முதலாகின்ற ஈரிய தளிர்கள்
அல்ல, ஈங்கு இதன் - இவ்வசோகின், மலைத்தகு வயவுநோய் தீர - திகைப்பைச் செய்யத்
தகுந்த வயவுப் பிணி தீரும் பொருட்டு, கலைத்தலை மகளிர் - கலைத்தொழிலிலே
தலையாய மகளிர்கள், தம் காமர் சீறடி - தம்முடைய அழகிய சிற்றடிகளாலே, வைத்தன -
வைக்கப்பட்டன வாகிய, அலத்தகச் சடர் - செம்பஞ்சுக்குழம்பின் ஒளிகளாம், என - என்று,
அறியக் காட்டினான் - அவ்விதூடகன் உணருமாறு உரைத்தான், (எ - று.)

     அதுகேட்ட நம்பி, விதூடக! இவ்வசோக மரத்தின் அடிப் பகுதியிலே தோன்றுவன
தளிர்கள் அல்ல; அவை, மகளிர்கள் இதன் வயவு நோய் தீர்த்தற் பொருட்டுத் தம்
அடிகளால் மிதித்தபொழுது அவ்வடிகளின் அலத்தகக் குழம்புபட்ட குறிகளேகாண்
என்றான் என்க.

(461)