நம்பியை விதூடகன் இவ்வசோகில் அடிச்சுவடு
பொறித்தாள் யார் எனல்

1605 .பந்தணையு 1மெல்விரலி பாடக மொடுக்கி
வந்தணையு மெல்லையுண் மயங்கியொரு மாற்றம்
அந்தணன் 2வினாவவக மீதுநினை வானாய்க்
கந்தணைவி லாதகளி யானைபல 3வல்லாய்.
இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்
     (இ - ள்.) பந்து அணையும் மெல் விரலி - பந்துகள் பயிலா நின்ற மெல்லிய
விரல்களையுடைய சுயம்பிரபை, பாடகம் ஒடுக்கி - தனது பாடகம் என்னும் காலணியை
ஓசையவித்து, வந்து அணையும் எல்லையுள் - வந்து அம்மணிச்சிலாவட்டத்தை
எய்தும்போது, அந்தணன் - விதூடகன், மயங்கி - தான் கண்ட ஒன்றனைத் தெளிந்து
கொள்ள மாட்டாதவனாய் மயக்குற்று, ஒருமாற்றம் - அதைத் தெளியும் ஒரு மொழியை,
வினாவ - திவிட்டனை வினவுதற்கு, அகம்மீது நினைவானாய் - தன் நெஞ்சத்தே
கருதியவனாய், கந்து அணைவிலாத களியானை பல வல்லாய் - கட்டுந்தறியை வெருவி
அதனை எய்த மறுக்கின்ற மதமயக்கமுடைய யானைப் போர் பலவற்றினும் வல்லவனாகிய
மன்னனே, (எ - று.)

     நம்பியை, உருக்கரத்துள்ள நங்கை ஒலியவித்து வந்து அணையப் போம் பொழுது,
விதூடகன் ஒரு பொருளை ஐயுற்றவனாய் நம்பியை வினாவும் பொருட்டு விளித்தான்
என்க.     

(475)