நங்கை விதூடகனைத் தளை விடுவித்தலும்
அவன் ஆடல் பாடல் இயற்றலும்

1617. இட்டதளை 1தம்மொடிரு தோளுமிடை வீக்கிக்
கட்டிவிடு பூம்பிணையல் கைவிடலு மெய்யுள்
ஒட்டிவிடு காதலொடு வந்துருவு கொண்டு
பட்டபல பாடலினொ டாடல்பல செய்தான்.
     (இ - ள்.) இட்ட தளை தம்மொடு - காலிலே இடப்பட்ட மாலையாகிய விலங்கோடே,
தோளும் இடைவீக்கிக் கட்டி விடு பூம்பிணையல் - இரண்டு கைகள் இடையேயும் இறுகக்
கட்டப்பட்ட பூமாலையாகிய தளையையும், கைவிடலும் - உழைக்கல மகளிர்கள் தேவியின்
குறிப்பறிந்து அகற்றி விட்டவுடனே, மெய்யுள் ஒட்டிவிடு காதலொடு- உடலோடே
ஒட்டிவிடுவதைப் போன்றதோர் அன்புடைமையோடே, வந்து - தேவியின் முன்னர் வந்து,
உருவுகொண்டு - கோலங்கொண்டு, பட்ட பல பாடலினோடு ஆடல்பல செய்தான் -
சுவைபட்ட பலவாகிய இசைப்பாட்டைப் பாடுதலோடே பலவேறு கூத்துக்களையும்
ஆடலானான், (எ - று.)

நங்கையின் குறிப்பறிந்து, உழைக்கல மகளிர் மாலையாகிய தளையை விட்டனராக,
விதூடகனும், அன்போடே தேவி முன்னர் வந்து, கோலங் கொண்டு பாடலோடே ஆடல்
செய்தான் என்க.

(487)