(இ - ள்.) கன்னி அம் காமவல்லி - கன்னிமையுடைய அழகிய காமவல்லி என்னும், கனங்குழை - கனவிய குழையினையுடைய, மடந்தை தன்னை - நங்கையை, மன்னவன் தேவிமார்கள் - திவிட்டனுடைய மனைவிமார்கள், மணவினைக் கோலம்செய்து - திருமணவினைக்குரிய ஒப்பனை பலவும் செய்து, பின் அதனோடு சேர்த்தி - பின்னர் அப்பாரிசாத மணமகனோடு கூட்டி, பெருகிய களியர் ஆனார் - மிக்க மகிழ்ச்சியுடையர் ஆயினார், இன் நகை புதல்வர் செல்வம் - இனிய முறுவலையுடைய மகார்கள் செல்வம் எய்துதலை, யாவரே இனிது என்னாதார் - யார் தாம் இனிதாகக் கருதாதார் உளர், (எ - று.)புதல்வர் செல்வம் - புதல்வர்கள் எய்தும் செல்வம், புதல்வராகிய செல்வ மெனினுமாம். பாரிசாதத்தை ஒப்பனை செய்த மகளிர், காமவல்லிக் கன்னியையும் கோலஞ் செய்து அதனோடே புணர்த்திப் பெரிதும் மகிழ்வாராயினர்; புதல்வர் செல்வத்தை யாரே இனிதென்று மகிழாதார் என்க. |