குராவம்பாவை கொண்டு பாராட்டல் | 1633. | விரவம்பூந் தளிரும் போது 2மிடைந்தன மிலைச்சு வாரும் அரவம்பூஞ் சிலம்பு செய்ய வந்தளிர் முறிகொய் வாரு மரவம்பூங் கவரி யேந்தி மணிவண்டு மருங்கு சேர்த்திக் குரவம்பூம் பாவை கொண்டு 3குழவியோ லுறுத்து வாரும். | (இ - ள்.) விரவு அம் பூந்தளிரும் போதும் மிடைந்தன மிலைச்சு வாரும் - கலந்துள்ள அழகுமிக்க இளந்தளிர்களையும் மலர்களையும் கொண்டு செறியப்புனைந்த மாலைகளைத் தம் தலையிலே சூடுவார்களும், பூஞ்சிலம்பு அரவம் செய்ய - அழகிய தம் சிலம்புகள் ஒலிப்ப, அந்தளிர் - அழகியவாய்த் தளிர்க்கின்ற, முறிகொய்வாரும் - தளிர்களைக் கொய்வார் களும், மரவம் பூங்கவரி ஏந்தி - வெண்கடப்ப மலர்களாகிய கவரிகளை ஏந்திக்கொண்டு, மணிவண்டு மருங்குசேர்த்தி - மாணிக்க வளையல்களைப் பக்கத்திலே செறித்து, குரவம் பூம்பாவை - குராமலராகிய பாவைகளைக் கைக்கொண்டு, குழவி யோல் உறுத்துவாரும் - தம் குழவிகளைத் தாலாட்டுதல் போலே தாலாட்டுவாரும், (எ - று.) ஓலுறுத்தல் - தாலாட்டுதல். குராமரத்தின் மலர் குழவிபோலிருந்தலின் அதனைக் குழவியெனக் கொண்டு மகளிர் ஆடுதல் மரபு என்க. மலைச்சுவாரும் கொய்வாரும் ஏந்தி, சேர்த்தி கொண்டு ஓலுறுத்து வாரும் ஆயினர் என்க. | (503) | | |
|
|