1635. | அருமலர்த் தழையும் போது மடியுறை யாக வேந்திக் திருமலர்ப் பாவை யன்ன தேவியைச் செவ்வி காண்பார் உருமல ரிழைத்த பாவை யொளிமண நயந்து மாதோ குருமலர்க் கொம்பி னொல்கிக் குரவையின் 1மயங்கு வாரும். | (இ - ள்.) அருமலர் போதும் தழையும் அடியுறையாக ஏந்தி - மலர்ந்த அரிய மலர்களையும் தழைகளையும் அடிக்காணிக்கையாகக்கொண்டு, திருமலர்ப்பாவை அன்ன தேவியை - அழகிய செந்தாமரை மலரிலே வீற்றிருக்கும் திருமகளை ஒத்த சுயம்பிரபையை, செவ்வி காண்பார் - அமயமறிந்து கண்டுமகிழ்வாரும், உருமலர் இழைத்த பாவை - அழகிய மலராலே இயற்றிய பதுமையின், ஒளி மணம் நயந்து - ஒளியையும் நறுமணத்தையும் விரும்பியவராய், (மாதோ) குருமலர்க் கொம்பின் ஒல்கி - நிறமமைந்த பூங்கொம்புபோலத் துவண்டு, குரவையின் மயங்கி நிற்பார் - குரவைக் கூத்தின்கட் பொருந்துவாரும், (எ - று.) தழையும் போதும் அடியுறையாக ஏந்தித் தேவியைச் செவ்வி காண்பாரும் மலராலிழைத்த பாவையின் ஒளியையும் மணத்தையும் நயந்து ஒல்கிக் குரவைக் கூத்தாடுவாருமாய் என்க. | (505) | | |
|
|