வாழைக் குருத்தில் உகிரால் ஓவியங் கிள்ளல் | 1640. | கள்ளுமிழ்த் துயிர்க்குஞ் சோலைக் 1கனமடற் குமரி வாழை உள்ளெழு சுருளை வாங்கி யொளியுகிர் நுதியி னூன்றிப் புள்ளெழு தடமும் போர்மான் றொழுதியு மிதுன மாய ஓள்ளெழி 2லுருவுங் கிள்ளி யுழையவர்க் கருளு வாரும். | (இ - ள்.) கள் உமிழ்ந்து உயிர்க்கும் சோலை - தேன் துளித்து நறுமணங்கமழும் அப்பொழிலிடத்தே, கனமடல் குமரி வாழை - கனவிய மடல்வாய்ந்த ஈனாத வாழையின், உள் எழு சுருளை வாங்கி - உள்ளே புதுவதாய் எழாநின்ற சுருளாகிய குருத்திலையை அரிந்தெடுத்து, ஒளிஉகிர் நுதியின் ஊன்றி - ஒளியுடைய தம் நகத்தின் நுனியாலே அழுத்தி, புள் எழுதடமும் - பறவைகள் எழாநின்ற குளங்களைப்போன்றும், போர்மான் தொழுதியும் - தம்முட் போரிடுகின்ற சிங்கக் குழாம்போன்றும், மிதுனம் ஆய - இணையாகிய, ஒள்ளெழில் உருவும் - ஒளியுடைய அழகிய பறவை யுருவங்கள் போன்றும், கிள்ளி - உருவமையக் கிள்ளி, உழையவர்க்கு - தம் தோழிமார்க்கு, அருளுவாரும் - வழங்குவாரும், (எ - று.) தேவியர் கனவிய வாழை மடலகத்தை உள்ள வாழைக்குருத்தினை வாங்கி விரித்து அதன்கண் தம் நகத்தாலே ஊன்றி தடமும் மான்றொழுதியும் மிதுனமும் போன்று உருவங்கிள்ளித் தம் தோழியர்க்குக் கொடுப்பாரும் என்க. போர் மான்தொழுதி - போரிடுகின்ற மான் கூட்டமுமாம். மிதுனம் - காதலிணைப் பறவை முதலியன. | (510) | | |
|
|