இதுவுமது

1645. அந்தா ரசோக மசோக மவர்க் கீந்த
செந்தார்த் திலகந் திலகமாய்ச் சேர்ந்தன
2வந்தார்க்கு மாவாது மென்பனபோன் மாதழைந்த
கொந்தார்பூஞ் சோலைக் குலகறிவோ கூடின்றே.
     (இ - ள்.) அம் தார் அசோகம் - அழகிய பூங்கொத்துக்களை உடைய
அசோகமரங்கள், அவர்க்கு - அத்தேவியர்க்கு, அசோகம் ஈந்த - சோகமின்மையை
அளித்தன, செந்தார்த்திலகம் - செவ்விய ஒழுங்குபட்ட திலகமரம், திலகமாய்ச் சேர்ந்தன -
தம் பூந்தாதுக்களாலே அவர் நெற்றியில் பொட்டாயின, மா - தேமா மரங்கள், ஆ - ஆ
ஆ, வந்தார்க்கும் - நம்பால் எய்திய தேவியர்க்கும்,

     ஆதும் - யாமும் உதவுவேம், என்பனபோல் - என்று கருதியன போன்று, தழைந்த -
அவர்க்கு நீழலாகித் தழைத்து நின்றன, கொந்து ஆர்பூஞ்சோலைக்கு -
கொத்துக்களையுடைய அப்பூம் பொழிலுக்கும் உலகு அறிவோ கூடின்றே - சான்றோர் தம்
உணர்ச்சியும் பொருந்துவ தாயிற்று, ஏ : அசை, (எ - று.)

 (515)