செய்குன்றம் | 1646. | வெள்ளித் திரண்மேற் பசும்பொன் மடற்பொதிந் தள்ளுறு தேங்கனி 1ய தாய்பொற் றிரளசைந்து புள்ளுறு பொன்வாழைக் கானம் புடையணிந்த தெள்ளு மணியருவிச் செய்குன்றஞ் சேர்ந்தார். | (இ - ள்.) வெள்ளி வெண் திரள்மேல் - வெள்ளியாற் றிரட்டிய தண்டின் மேலே, பசும்பொன் மடல் பொதிந்து - பசிய பொன்னாலியன்ற மடல்களால் மூடி, அள் உறு தேங்கனி அதாய் - அளிகின்ற இனிய கனியாக, அம்பொன் திரள் அசைந்து - அழகிய பொன்னைத் திரட்டியாத்து, புள் உறு - பொன்னாலாய பறவைகளையும் அமைத்த, பொன் வாழைக் கானம் - பொன் வாழைப் பூம்பொழிலை, புடை அணிந்த - மருங்கிலே உடையனவாய், தெள்ளும் மணி அருவி - தெளிந்த நீல மணிபோன்ற நிறமுடைய அருவிகள் விழுகின்ற, செய் குன்றம் சேர்ந்தார் - செய்குன்றங்களை எய்தினர், (எ - று.) அள்ளுறுதல் - அளிதல், அதாவது கனிதல். செய்குன்றம் - பொழிலினுள் மலையுறுப்புக்கள் அமையச் சிற்பிகளால் இயற்றப்படுகின்ற செயற்கை மலை. புட்கள் பொன்வாழைக் கனியைக் கனியெனக் கருதி வருதற்குக் காரணமான எனினுமாம். வெள்ளித் தண்டின் மேலே பசும்பொன் மடல் போர்த்துத் தேங்கனியும் பொற்றிரளாற் செய்து வைத்த பொன் வாழைக்கானம் புடையணிந்த செய்குன்றம் என்க. | (516) | | |
|
|